தொப்பி தலைப்பாகை


தொப்பி, தலைப்பாகை அணிவதற்குரிய ஆதாரங்கள்:

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொப்பி, தலைப்பாகை அணிந்திருப்பதற்கு ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியாது, காணவில்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்த பி.ஜே.யின் முகத்திரை கீழ்காணும் ஆதாரங்கள் மூலம் கிழித்தெறியப்படுகிறது.

1. அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது ஒரு மனிதர் அல்லாவின் தூதரே, இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த ஆடையை அணிய வேண்டும் ? என்று கேட்டார், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகள், (முழு நீளச்) சட்டைகள், தலைப்பாகைகள், முழுக்கால் சட்டைகள், தொப்பிகள்
காலுறைகள்ஆகியவற்றைஅணியாதீர்கள்.                               

காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் அணிந்து கொள்ளட்டும். ஆனால் காலுறை இரண்டும் கனுக்கால்களுக்குகீழே இருக்கும் படி கத்தரித்துக்கொள்ளட்டும். குங்குமப் பூச்சாயம் மற்றும் வர்ஸ்எனும் வாசனைச் செடியின் சாயம் தேய்க்கப்பட்ட ஆடைகளை அணியாதீர்கள் என்று சொன்னார்கள். (புஹாரி 5083)

இஹ்ராம் அணியும்போது தொப்பி அணியாதீர்கள் என்று சொல்லும்போது மற்ற நேரங்களில் தொப்பி அணியுங்கள் என்று உறுதியாக கூறுவது தெரிகிறது.
2. இஸ்ஸத் பின்த் இயாத் கூறியதாவது, ‘அபா கிர்ஸாபா கூற நான் கேட்டிருக்கிறேன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு ஒரு தொப்பியை அளித்து இதனை நீ அணிந்து கொள்எனக் கூறினார்கள்.
(
முக்ஜமுல் கபீர் அத்தபரானி 319 (2520))
3. சுலைமான் பின் தர்கான் அவர்கள் கூறியதாவது, ‘அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது தொப்பியொன்றை நான் கண்டேன். அது மஞ்சள் நிறத்தில் கம்பலி கலந்த பட்டால் ஆனதாக இருந்தது. (புஹாரி 5082)

4. (கடும் வெப்பத்தின் காரணமாக) ஸஹாபாக்கள் தலைப்பாகையின் மீதும், தொப்பியின் மீதும் ஸஜ்தா செய்வார்கள்.
அறிவிப்பவர்:ஹஸன்ரலியல்லாஹுஅன்ஹு
நூல் : புகாரி
5. ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்கள் (மக்கா வெற்றியின் போது) கறுப்புத் தலைப்பாகை அணிந்தவர்களாக மக்காவில் நுழைந்தனர்அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்துல்லா (ரலியல்லாஹு அன்ஹு)நூல் : முஸ்லிம்
6. (அதே மக்கா வெற்றியின் போது) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கறுப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் மக்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்
அறிவிப்பவர் : ஜஃபர் இப்னு அம்ரு (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : முஸ்லிம்

7. ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளு செய்யும் போது தன் தலைப்பாகையின் மீது மஸஹ் செய்தார்கள்அறிவிப்பவர் :
அனஸ்(ரலியல்லாஹுஅன்ஹு)
நூல் : அபூதாவூத், இப்னு மாஜா

8. இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது தலைப்பாகையை இரண்டு தோல்களுக்குமிடையில் தொங்க விடுபவர்களாக இருந்தார்கள். (திர்மிதி)

9. ‘இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) மக்காவுக்குப் புறப்பட நேர்ந்தால், ஒட்டகப் பயணம் சிரமமாகும் போது ஏறிச் செல்வதற்கு (மாற்று வாகனமாக) கழுதையையும், ஒரு தலைப்பாகையையும் வைத்திருப்பார்கள். அதை தலையில் கட்டிக் கொள்வார்கள்’.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் : முஸ்லிம்

10. அப்துல்லாஹ் பின் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவாகள் அறிவிக்கிறார்கள், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளை தொப்பி அணிந்திருந்தார்கள்.’ –
நூல்: தப்ரானி.

11. ருக்கானா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் நமக்கும் முஷ்ரிக்குகளுக்கும் உள்ள வித்தியாசம் தொப்பியின் மீது தலைப்பாகை அணிவதுதான்’. நூல்: ஸுனன் அபூதாவூது 4075, ஸுனன் திர்மிதி 3919.

12. ஹஜ்ரத் ஹஸனுல் பஸரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘ஸஹாபாக்கள் தங்களுடைய தலைப்பாகை, தொப்பியின் மீது ஸஜ்தா செய்பவர்களாக இருந்தார்கள்’.-நூல் புஹாரி 1/151

13. தப்ரானி இமாம் மற்றும் சுயூத்தி இமாம் ஆகியோர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெள்ளை தொப்பி அணிந்திருந்தார்கள் என்று அறிவிக்கிறார். தப்ரானி இமாம் அவர்கள் இதை நம்பகமானது என்றும், இமர் சுயூத்தி அவர்கள் ஸஹீஹான ஹதீது என்றும் கூறுகின்றார்கள். நூல்: சிராஜுல் முனீர் பாகம் 4, பக்கம் 112

14. அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொப்பி அணிவதை வழக்கமாக கொண்டிருந்தனர். நூல்: ஸஹீஹுல் புஹாரி பாகம் 2 பக்கம் 863.

15. ஹஜ்ரத் முல்லா அலி கரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள், ‘தொப்பியானது முஸ்லிம்களின் சிறப்பான, முக்கிய இஸ்லாமிய சின்னமாகும்.- மிர்காத் அல் மஸாபீஹ் வால்யூம் 8, பக்கம் 246.
எமக்கு இந்த விசயத்தில் சஹீஹான அறிவிப்புகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையை சுட்டிக்காட்டுகிறது. இதனால் தலையை மறைப்பது ஒரு சுன்னத்தான விசயம் என உறுதியாகக் கூறமுடியும்.